எழுத்தில் ஆர்வம் மிகுந்த விட்ட தருணம் முதலே உள்ளக்கிடக்கையை அப்படியே எழுதி விட வேண்டும் என தோன்றும். எனினும் உண்மையை பட்டவர்த்தனமாய் உலகுக்கு சொல்ல இயலாதது ஆணித்தரமாய் தடுத்துவிடும. அதற்கு நானே அமைத்துக் கொண்ட காரணம் உலகம் உண்மையை திரித்து புரிந்து கொண்டுவிடுமேன்பது. ஆனால் சமீபங்களில் உலகு பற்றிய பயங்கள் அற்று போகின்றன. ஏனென்று தெரியவில்லை. உள்ளத்தில் உள்ளதை எழுத தயங்குவதில்லை இப்பொழுதெல்லாம்.
பெண்கள் பல வாறாய் ஆக்கிரமிக்கின்றனர் நம் வாழ்வை. தாய், தங்கை தோழி ஏன் பல உருவகங்களில் அது. மீண்டும் பொக்கிஷ டைரியில் எங்கோ எப்போழ்தோ கிறுக்கியது.
சாப்பிட்டாயா?
பாசமொழுக கேட்கும் தாயிடமும்
பணமிருக்கிறதா? போதுமா?
அக்கறையாய் கரையும் தந்தையிடமும்
டேய், வண்டியை பொதுவா ஓட்டு ,
மரியாதையாய் மிரட்டும் தங்கையிடமும்
பிரச்சனை ஒன்றுமில்லையே ?
நல்வாழ்விற்கு பயப்படும் அண்ணனிடமும்
கூட பகிர்ந்து கொள்ள இயலாத
என்னை கொன்று வதைக்கும்
சிற்சில உணர்வுகளுக்காகவே,
ஏன் முழுமையையும் உன்னிடம் பகிர்ந்திடவே
நீ என்னை காதலிக்க விழைகிறேன்.
காதலிப்பாயா?
காதலி!
இவ்வாறாக மனம் காதலை நாடும் என்றுமே. அவவென்னத்திற்கு நீரூற்றி விடும் வண்ணமாக சில பெண்கள் மனதின் கதவு வரை வந்ததுண்டு. கதவுகள் திறக்காமல் போஎனது ஏனென்று தெரியவில்லை. ஆனால் கதவு வரை வந்து , தட்டி விட்டு சென்ற அந்த சுவடுகள் இனிமை. சுருங்காத சொன்னால் இது எனது ஆட்டோகிராப்.
ஆட்டோகிராப் I
சீர்கேடான வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்பம் ஒவ்வொரு முறையும் கல்லூரி ஆண்டு விடுமுறைக்கு வீடு வருவது.
வீடு வருவதில் ஒரே வருத்தம் அதற்கு சற்று முன் எழுதியிருக்கும் தேர வழியே இல்லாத பரீட்சை.
மயிரே போச்சு. இன்னும் இரண்டு மாதம் விடுமுறை. அதன் பின்னரே, எனக்கு தெரிந்த தேர்வு முடிவுகள் வரும். அப்படியே வந்தாலும் பாஸ் என்று இது வரை ஒற்றை வார்த்தையில் சொன்னது போலவே சொல்லிவிடலாம். ஏனோ அப்பாவும் சரி அம்மாவும் சரி அதற்கு மேல் கேள்வி கேட்பதே இல்லை.
இந்த முறையும் மங்களூர் மெயில் ஏறி அமர்ந்தாயிற்று. நினைவுகள் நிலையின்றி ஏதேதோ பற்றி திரிந்து கொண்டிருந்தது. மனதை ஒருமுகம் படுத்த முருக கடவுளை போற்றவும், வாழ்த்தவும் அறிந்திருந்த இரு செய்யுள்களை சிரத்தையுடன் சொல்ல முயன்றேன். முருகனை தவிர அனைத்தையும் மனதில் நிறுத்த முடிந்தது.
அதில் பளிச்சென நின்றது நாளை விவேகா வீடு வரை வருவாளா. இல்லை நாம் ஏதேனும் காரணம் சொல்லி அவள் வீட்டிற்கு போகலாமா? இருவரும் இருவர் வீட்டுக்கும் இதற்கு முன்னர் பல முறை அந்நியோனிய முறையில் சரளமாக புழங்கியதுண்டு.
ஆனால் பருவத்தின் மாற்றங்கள் அந்நியோனத்தை அந்நியம் ஆக்கி விடுகிறது.
அவளை பார்க்கும் போதெல்லாம் ஒரு பரவசம் வந்துவிடுகிறது இப்பொழுது.
அவளுக்கு என் மீது எப்போதும் அப்படியே.
சென்ற முறை அன்னியோனத்தின் ஆதாரத்தில் அவளை சந்தித்து அளவளாவி கொண்டிருந்த பொது அருகில் சம்மனங்கால் போட்டு அமர்ந்து " ஏய் இன்னும் ரெண்டு வாரத்தில் +2 பரீட்சைகள் ஆரம்பிக்குது எதுனா டிப்ஸ் குடுப்பா "என்றாள்.
நல்லது சொல்வேன் என்ற அவள் நம்பிக்கையை பாழடிக்காமல் "மேத்ஸ் ல மட்டும் 200 கண்டிப்பா எடுத்திடு . மத்ததெல்லாம் தன்னால நடக்கும்" என்றேன்.
ஆர்வமாய் கேட்டவள் சட்டென முகம் சிறுத்து "உன் அளவுக்கு எனக்கு மூளை இல்ல பா"
"நான் கூட 200 எடுக்க முயற்சி தான் செய்தேன். எடுக்கவில்லை. 198 தான் வந்துச்சு. இருந்தாலும் அதுவும் போதும். நீயும் அப்படியே முயற்சி பண்ணு."
"இல்ல இல்ல அவ்ளோ எல்லாம் எடுக்க முடியாது"
இல்லை உன்னை நீ முதலில் நம்ப வேண்டும் என்று நீதி போதனை எல்லாம் சொல்வதாய் இல்லை நான்.
"எழுதறத எழுது. அதுகேத்த மாரி பார்த்துகலாம். இன்ஜினியரிங் , மெடிக்கல் தவிர எவ்வளவோ சாய்ஸ் இருக்கு " என்றேன்.
சட்டென முகம் மலர்ந்தவளாய் "உங்க காலேஜ் ல அந்த மாதிரி சாய்ஸ் இருக்கா?" என்றாள்.
"நிறைய உண்டு "
"என்ன மாதிரி எல்லாம்?"
"பையோடெக் , ஆர்க்கிடெக்ச்சர், எல்லாம்..."
"பையோடெக் படிச்சா நல்லதா?"
இப்படியாக பேச்சின் போக்கு சென்றது என்னை அறியாமலேயே எனக்குள் எரிச்சலை உண்டுபண்ணிவிட்டது போல.
"முதல் ல வர்ற பரீட்சையை நல்லா எழுது. மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம் " என்றேன் சற்றே எரிச்சலாக.
சட்டென எழுந்து சமையலறையுள் இருந்த அம்மாவுடன் பேச சென்றாள்.
நான் டிவி ரிமோட்டை குடைய ஆரம்பிதேன்.
ஜோதிகா ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்திற்கு அடங்கியது என்னுடைய ரிமோட் உடனான ஊடல்.
ஜோதிகா வின் ஆட்டத்தில் குவிந்தது என் முழு கவனமும்.
மின்னலென முன்வந்து நின்றால் விவேகா ஜோதிகாவை மறைத்துக் கொண்டு.
"லூசு நவுரு , பாட்டை பார்க்கணும் "
"பாட்டை கேட்டா போதுமே.அதான் கேட்குதுல்ல"
"தோடா ....நவுரு நவுரு ...ப்ளீஸ் நவுரு ....."
அவள் நகர்ந்து கொண்டே "ஜோதிகா வ தான் பாக்குறேன் னு சொல்லேன்"
"நல்ல இருந்தா பார்க்கறது தான்" என்றேன்.
"இந்த படம் பார்த்துட்டியா ?"
"ம்ம்ம்ம்ம்ம்"
"நிறைய படம் பார்ப்பல்ல?"
"ம்ம்ம்ம்ம்ம்"
"ம்ம்ம்ம்...நானும் சென்னை வரணும் படிக்க"...
நான் டிவி பார்த்துக் கொண்டே இருந்தேன். ஜோதிகா தெரிய வில்லை.
மீண்டும் ஜோதிகா போல் தெரிந்தது. நினைவு திரும்பியவனாய் உணர்ந்து பார்த்த போது ஜோதிகா போல் ஒரு பெண் ரெயிலில் ஏறினாள்.
விவேகா கண் முன் வந்து போனால்.
ரெயில் புறப்பட்டது. வேறு கனவுகளில் மூழ்கி தூங்கி போனேன்.
தொடரும்.......
Monday, May 11, 2009
அம்மா.
கவிதை கிறுக்கல்களை போல கல்லூரி நாட்களில் சில சிறுகதைகளை கிருக்கியதுண்டு. எனது பொக்கிஷ டைரியின் பக்கங்களில் இருந்து அவற்றில் ஒன்று.
இந்த கதையின் களம் இன்று வரை relatable ஆக இறப்பதற்கு காரணம் நாட்டு நிலைமையே.
அம்மா.
ஆனந்த் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
அருகில் அமர்ந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் பாலு.
இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது ஆனந்திற்கு. இந்த உலகை அவன் காண போவது இந்த ஒரு மணி நேரமே.
நேரம் நெருங்க நெருங்க ஆனந்திற்கு வியர்த்தது.
அவனது வியர்வையின் விருத்தியைக் கண்ட பளு
"என்னடா பயம் வந்துடுச்சா?"
"இல்லை".சட்டென சற்று கோவத்துடன் மறுத்தான் ஆனந்த்.
அவனே தொடர்ந்தான்.
"பயம் எல்லாம் ஒண்ணுமில்லை. காரியம் நடக்கும். நானும் மனுஷன் தான். எனக்குள்ள உணர்வுகள் எல்லாம் இந்த ஒரு மணி நேரம் தான். அதை நான் தடுக்க விரும்பவில்லை "
நாலு நிதானமாய் "உன்னுடைய உணர்வுகள் உன்னை பலவீனப்படுத்தும். அவற்றை விட்டொழி. சிந்தனையை காரியத்தில் மட்டும் செலுத்து" என்றான்.கிட்டதட்ட அது ஒரு ஆணையே.
ஆனந்த் மெல்ல தலையாட்டினான்.
பாலு மேலும் " காரியத்திற்கு நீ தேர்ந்தெடுக்கப்பட்டது உன் அதிர்ஷ்டம். இதை நீ ஒரு புண்ணிய யாத்திரையாக நினைக்க வேண்டும்"
பேசிக்கொண்டே எழுந்த பாலு "நான் போயி வண்டிய எடுத்திட்டு வர்றேன்.இன்னும் அரை மணி நேரத்தில் நாம் புறப்படணும் "என்று அங்கிருந்து நகர்ந்தான்.
ஆனந்த் காரியத்தில் சிந்தையை செலுத்தி ஆயத்தமானான்.
காரியம், சரியாக 12 மணிக்கு அருகில் உள்ள மைதானத்தில் நடக்கும் மத கூட்டம் ஒன்றில் மக்களோடு மக்களாய் ஆனந்த் கலந்து சென்று தன உடம்பில் உள்ள சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்வது.
எப்படியும் நூறு பேரையாவது கொல்வது என்பது இலக்கு. சீட்டு போட்டு ஆனந்த் மனித குண்டாய் மாருவதென முடிவு எடுக்க பட்டது.
அப்பா இல்லாத, அம்மாவையும் இரண்டு அக்காவையும் கொண்ட தன குடும்பத்தை காக்க பலவாறாய் கஷ்டபட்டு கடைசியில் ஆனந்த் கொண்டது தீவிரவாதம். தீவிரவாதம் செய்தே தன குடும்பத்தை காத்து வந்தான். காரியம் முடிந்த பின் அவன் குடும்பத்துக்கும் ஒரு பெரிய தொகை சென்றடைய ஏற்பாடுகள் செய்யபட்டுவிட்டன.
இந்த காரியத்தின் மூலம் குறிபிட்ட அந்த மதத்திற்கு பாடம் புகட்டுவதே இவர்கள் நோக்கம். உயிர்பலி கொடுத்தேனும் தங்கள் மதத்தின் மேண்மையை உணர்த்த செய்யும் முரணான முரட்டுத்தனம் இது. இஷ்டமில்லாமல் தான் ஆனந்த் இந்த கூட்டத்தில் சேர்ந்தான். ஆனால் இன்று அவனும் இரக்கமில்லா, இறுக்கமான மனிதனாகிவிட்டான். காரியத்திற்கு வண்டியில் புறப்பட தயாராகிவிட்டுருந்தான்.
ஒரு அம்பாசடர் கார் வந்து நின்றது.
"போகலாம்" என்றான் பாலு இறங்காமலே. கதவை திறந்து விட்டான்.
திடீர் என எதோ ஒரு உணர்வு கவ்வ மெல்ல அடி எடுத்து வைத்தான் ஆனந்த்.
மறுபடியும் ஏதோ எண்ணம் வலுத்து கவ்வ , அவன் நாசிகள் விரிந்தது. கண்களை மிக சுருக்கி கைகள் நாசி நோக்கி தன்னாலே போக வாய் வரை கைகள் வந்த போதே ஹ ஹி ஹி என்று ஒரு சிறு ராகம் பாடி, "அம்மா" என்று பெரும் தும்மலை தும்மினான்.
சட்டென நெஞ்சுக்குள் விம்மினான். கலங்கினான். காருக்குள் ஏற தயங்கினான்.
அவனது தயக்கம் கண்ட பாலு "என்ன தும்மல்?சகுனம் சரி இல்லையா? ஏதாவது தடங்கல் வந்திடுமோ? எல்லாம் சரியாய் பண்ணி விட்டே தானே?" என்று கேள்விகளை அடுக்கினான்.
பின் அவனே "சரி எல்லாம் நல்ல படியா தான் நடக்கும் . நீ ஏறு " என்றான்.
காருக்குள் ஜடம் போல் ஏறினான்.
அந்த தும்மல் அவனை ரொம்ப பாதித்தது.
தும்மிய போது அவன் உதிர்த்த அம்மா என்னும் பிடிமானம் அவனை உறுத்தியது.
வண்டி நகர அவன் மனதில் அலைகள் ஓடியது.
"அம்மா". என்ன ஒரு அழகான ஜீவன்.
என்னையறியாமல் வரும் தும்மல், அது சிறு நொடிப்பொழுதே ஆகிடினும் அதற்கு கூட ஏன் தாயின் பிடிமானம் தேவை படுகிறது.
ஆனந்த் தன் தாயை பற்றி சிந்திக்கலானான்.
இரண்டு பெண் குழைந்தைகளுக்கு பிறகு, பிறக்கும் முன்பே தந்தையை கொன்று விட்டது என்றும், பிறக்க போவதும் பெட்டையாகிடின் கஷ்டம் என்றும் தன் கருவை கலைக்க சொன்னவர்களை சட்டை செய்யாது என்னை பெற்றெடுத்தவள்.
அம்மாவின் வாதம், ஏன் குழந்தையோ எந்த குழந்தையோ சாவதற்கு என்று பிறப்பதில்லை. அவரவர் பயனுடனே உயிரினம் பிறக்கும் இப்பூமியில்.
அதன் பின் உறவுகள் உதவ மறுத்து,ஊர் விட்டு, எத்தனையோ போராட்டங்களுடனே வளர்த்தாள் மூவரையும். இத்தனை போராட்டங்களிலும் மாறாதது அம்மாவின் கனிவு மனம். அம்மா பார்த்த தொழில் வழி வழியாய் கற்றுக்கொண்ட மருத்துவச்சி தொழில். அம்மாவின் பத்திய மருந்து வாங்கி போய் குணம் அடைந்தவர்கள் ஆனந்தமாய் சொல்வதுண்டு "உங்க கையிலே மந்திர சக்தி இருக்கும்மா. அது தான் எல்லா உயிரையும் காப்பாத்துது. " அம்மாவிடமிருந்து ஒரு புன்னகையே பதிலாய் வரும்.
அம்மா தன்னிடம் பத்திய மருந்து வாங்குவரிடை பேதம் பார்ப்பதில்லை என்றுமே. ஒரு முறை பக்கத்து தெரு வேசி கேட்க பத்தியம் அரைத்து கொடுத்தாள். கோவத்தில் பேசிய என்னிடம் " அவ தொழில் அது. ஏன் தொழில் இது. இந்த உலகில் பிறக்கும் எந்த உயிர்க்கும் வாழும் முறையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அவரவர் முறைகளுக்கான பயன்களையும் அவரே பெறுவர். எம்முறையில் வாழ்ந்தாலும் பிற உயிர்களை வதைக்கும் உரிமை மட்டும் யாருக்கும் சொந்தமில்லை. அப்பெண்ணுக்கு பத்தியம் செய்யாவிட்டால் அவளை வேதனையில் உழள விட்ட பாவத்தை செய்தவளாவேன். அந்த ஒரு பாவம் போதும் நான் வாழ்நாள் முழுக்க துன்புற்றிருக்க. இதை கூட ஒரு மருத்துவச்சியாக பேச வில்லை. சாதரண அன்புள்ளம் கொண்ட மனுஷியாக தான் பேசுகிறேன். நீயும் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாதே. இந்த பூமி தழைக்க தேவை அளவில்லா அன்பு " என்றாள்.
எண்ணங்கள் அலை அலையாய் ஓட, உடம்போ அருவியென வியர்த்திருந்தது ஆனந்திற்கு. மனதிற்குள் ஆயிரம் அம்புகள் தைத்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் "நிறுத்துங்க வண்டியை" என்று அலறினான்.
படக்ட்டதுடன் பக்கத்திலிருந்த பாலு "ஏன்? என்ன ஆச்சு? "என்றான்.
வண்டியும் நின்றது.
"என்னால் முடியாது " என்றான் ஆனந்த்.
"முட்டாள் மாதிரி பேசாதே. வாழ்வின் பயனை அடையும் தருணத்தை அடைந்து கொண்டிருக்கிறாய் நீ. இது என்ன முட்டாள் தனமான முடிவு " என்றான்.
"இல்லை என்னால் முடியவே முடியாது "என்றான்.
கோவத்துடன் பாலு "கடமையுணர்ச்சி இன்றி பேசாதே" என்றான்.
"இல்லை கடமையுணர்ச்சி இருப்பதால் தான் இந்த முடிவு"
"என்ன கடமையுணர்ச்சி ?" என்றான் பாலு.
"கருணையின் வடிவாம் தாயின் மூலம் இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய கடமையுணர்ச்சி" என்று கூறி காரிலிரிந்து இறங்கி நடந்தான் ஆனந்த்.
இந்த கதையின் களம் இன்று வரை relatable ஆக இறப்பதற்கு காரணம் நாட்டு நிலைமையே.
அம்மா.
ஆனந்த் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
அருகில் அமர்ந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் பாலு.
இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது ஆனந்திற்கு. இந்த உலகை அவன் காண போவது இந்த ஒரு மணி நேரமே.
நேரம் நெருங்க நெருங்க ஆனந்திற்கு வியர்த்தது.
அவனது வியர்வையின் விருத்தியைக் கண்ட பளு
"என்னடா பயம் வந்துடுச்சா?"
"இல்லை".சட்டென சற்று கோவத்துடன் மறுத்தான் ஆனந்த்.
அவனே தொடர்ந்தான்.
"பயம் எல்லாம் ஒண்ணுமில்லை. காரியம் நடக்கும். நானும் மனுஷன் தான். எனக்குள்ள உணர்வுகள் எல்லாம் இந்த ஒரு மணி நேரம் தான். அதை நான் தடுக்க விரும்பவில்லை "
நாலு நிதானமாய் "உன்னுடைய உணர்வுகள் உன்னை பலவீனப்படுத்தும். அவற்றை விட்டொழி. சிந்தனையை காரியத்தில் மட்டும் செலுத்து" என்றான்.கிட்டதட்ட அது ஒரு ஆணையே.
ஆனந்த் மெல்ல தலையாட்டினான்.
பாலு மேலும் " காரியத்திற்கு நீ தேர்ந்தெடுக்கப்பட்டது உன் அதிர்ஷ்டம். இதை நீ ஒரு புண்ணிய யாத்திரையாக நினைக்க வேண்டும்"
பேசிக்கொண்டே எழுந்த பாலு "நான் போயி வண்டிய எடுத்திட்டு வர்றேன்.இன்னும் அரை மணி நேரத்தில் நாம் புறப்படணும் "என்று அங்கிருந்து நகர்ந்தான்.
ஆனந்த் காரியத்தில் சிந்தையை செலுத்தி ஆயத்தமானான்.
காரியம், சரியாக 12 மணிக்கு அருகில் உள்ள மைதானத்தில் நடக்கும் மத கூட்டம் ஒன்றில் மக்களோடு மக்களாய் ஆனந்த் கலந்து சென்று தன உடம்பில் உள்ள சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்வது.
எப்படியும் நூறு பேரையாவது கொல்வது என்பது இலக்கு. சீட்டு போட்டு ஆனந்த் மனித குண்டாய் மாருவதென முடிவு எடுக்க பட்டது.
அப்பா இல்லாத, அம்மாவையும் இரண்டு அக்காவையும் கொண்ட தன குடும்பத்தை காக்க பலவாறாய் கஷ்டபட்டு கடைசியில் ஆனந்த் கொண்டது தீவிரவாதம். தீவிரவாதம் செய்தே தன குடும்பத்தை காத்து வந்தான். காரியம் முடிந்த பின் அவன் குடும்பத்துக்கும் ஒரு பெரிய தொகை சென்றடைய ஏற்பாடுகள் செய்யபட்டுவிட்டன.
இந்த காரியத்தின் மூலம் குறிபிட்ட அந்த மதத்திற்கு பாடம் புகட்டுவதே இவர்கள் நோக்கம். உயிர்பலி கொடுத்தேனும் தங்கள் மதத்தின் மேண்மையை உணர்த்த செய்யும் முரணான முரட்டுத்தனம் இது. இஷ்டமில்லாமல் தான் ஆனந்த் இந்த கூட்டத்தில் சேர்ந்தான். ஆனால் இன்று அவனும் இரக்கமில்லா, இறுக்கமான மனிதனாகிவிட்டான். காரியத்திற்கு வண்டியில் புறப்பட தயாராகிவிட்டுருந்தான்.
ஒரு அம்பாசடர் கார் வந்து நின்றது.
"போகலாம்" என்றான் பாலு இறங்காமலே. கதவை திறந்து விட்டான்.
திடீர் என எதோ ஒரு உணர்வு கவ்வ மெல்ல அடி எடுத்து வைத்தான் ஆனந்த்.
மறுபடியும் ஏதோ எண்ணம் வலுத்து கவ்வ , அவன் நாசிகள் விரிந்தது. கண்களை மிக சுருக்கி கைகள் நாசி நோக்கி தன்னாலே போக வாய் வரை கைகள் வந்த போதே ஹ ஹி ஹி என்று ஒரு சிறு ராகம் பாடி, "அம்மா" என்று பெரும் தும்மலை தும்மினான்.
சட்டென நெஞ்சுக்குள் விம்மினான். கலங்கினான். காருக்குள் ஏற தயங்கினான்.
அவனது தயக்கம் கண்ட பாலு "என்ன தும்மல்?சகுனம் சரி இல்லையா? ஏதாவது தடங்கல் வந்திடுமோ? எல்லாம் சரியாய் பண்ணி விட்டே தானே?" என்று கேள்விகளை அடுக்கினான்.
பின் அவனே "சரி எல்லாம் நல்ல படியா தான் நடக்கும் . நீ ஏறு " என்றான்.
காருக்குள் ஜடம் போல் ஏறினான்.
அந்த தும்மல் அவனை ரொம்ப பாதித்தது.
தும்மிய போது அவன் உதிர்த்த அம்மா என்னும் பிடிமானம் அவனை உறுத்தியது.
வண்டி நகர அவன் மனதில் அலைகள் ஓடியது.
"அம்மா". என்ன ஒரு அழகான ஜீவன்.
என்னையறியாமல் வரும் தும்மல், அது சிறு நொடிப்பொழுதே ஆகிடினும் அதற்கு கூட ஏன் தாயின் பிடிமானம் தேவை படுகிறது.
ஆனந்த் தன் தாயை பற்றி சிந்திக்கலானான்.
இரண்டு பெண் குழைந்தைகளுக்கு பிறகு, பிறக்கும் முன்பே தந்தையை கொன்று விட்டது என்றும், பிறக்க போவதும் பெட்டையாகிடின் கஷ்டம் என்றும் தன் கருவை கலைக்க சொன்னவர்களை சட்டை செய்யாது என்னை பெற்றெடுத்தவள்.
அம்மாவின் வாதம், ஏன் குழந்தையோ எந்த குழந்தையோ சாவதற்கு என்று பிறப்பதில்லை. அவரவர் பயனுடனே உயிரினம் பிறக்கும் இப்பூமியில்.
அதன் பின் உறவுகள் உதவ மறுத்து,ஊர் விட்டு, எத்தனையோ போராட்டங்களுடனே வளர்த்தாள் மூவரையும். இத்தனை போராட்டங்களிலும் மாறாதது அம்மாவின் கனிவு மனம். அம்மா பார்த்த தொழில் வழி வழியாய் கற்றுக்கொண்ட மருத்துவச்சி தொழில். அம்மாவின் பத்திய மருந்து வாங்கி போய் குணம் அடைந்தவர்கள் ஆனந்தமாய் சொல்வதுண்டு "உங்க கையிலே மந்திர சக்தி இருக்கும்மா. அது தான் எல்லா உயிரையும் காப்பாத்துது. " அம்மாவிடமிருந்து ஒரு புன்னகையே பதிலாய் வரும்.
அம்மா தன்னிடம் பத்திய மருந்து வாங்குவரிடை பேதம் பார்ப்பதில்லை என்றுமே. ஒரு முறை பக்கத்து தெரு வேசி கேட்க பத்தியம் அரைத்து கொடுத்தாள். கோவத்தில் பேசிய என்னிடம் " அவ தொழில் அது. ஏன் தொழில் இது. இந்த உலகில் பிறக்கும் எந்த உயிர்க்கும் வாழும் முறையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அவரவர் முறைகளுக்கான பயன்களையும் அவரே பெறுவர். எம்முறையில் வாழ்ந்தாலும் பிற உயிர்களை வதைக்கும் உரிமை மட்டும் யாருக்கும் சொந்தமில்லை. அப்பெண்ணுக்கு பத்தியம் செய்யாவிட்டால் அவளை வேதனையில் உழள விட்ட பாவத்தை செய்தவளாவேன். அந்த ஒரு பாவம் போதும் நான் வாழ்நாள் முழுக்க துன்புற்றிருக்க. இதை கூட ஒரு மருத்துவச்சியாக பேச வில்லை. சாதரண அன்புள்ளம் கொண்ட மனுஷியாக தான் பேசுகிறேன். நீயும் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாதே. இந்த பூமி தழைக்க தேவை அளவில்லா அன்பு " என்றாள்.
எண்ணங்கள் அலை அலையாய் ஓட, உடம்போ அருவியென வியர்த்திருந்தது ஆனந்திற்கு. மனதிற்குள் ஆயிரம் அம்புகள் தைத்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் "நிறுத்துங்க வண்டியை" என்று அலறினான்.
படக்ட்டதுடன் பக்கத்திலிருந்த பாலு "ஏன்? என்ன ஆச்சு? "என்றான்.
வண்டியும் நின்றது.
"என்னால் முடியாது " என்றான் ஆனந்த்.
"முட்டாள் மாதிரி பேசாதே. வாழ்வின் பயனை அடையும் தருணத்தை அடைந்து கொண்டிருக்கிறாய் நீ. இது என்ன முட்டாள் தனமான முடிவு " என்றான்.
"இல்லை என்னால் முடியவே முடியாது "என்றான்.
கோவத்துடன் பாலு "கடமையுணர்ச்சி இன்றி பேசாதே" என்றான்.
"இல்லை கடமையுணர்ச்சி இருப்பதால் தான் இந்த முடிவு"
"என்ன கடமையுணர்ச்சி ?" என்றான் பாலு.
"கருணையின் வடிவாம் தாயின் மூலம் இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய கடமையுணர்ச்சி" என்று கூறி காரிலிரிந்து இறங்கி நடந்தான் ஆனந்த்.
Thursday, May 7, 2009
Listening to Azhagar malai songs.
Every time to unshackle the tiredness of life’s’ monotony and experience the lost innocence via music or any art is bliss. Listening to Azhagar malai songs is one such. The Simple neat tunes, ear friendly orchestrations, great singing, meaningful (and I see a immense personal outburst by raasa ) lyrics, all that experiencing after a long time is quite refreshing. It is clearly raja straight from heart and root. And what bliss it can be? Boundless.
Tuesday, April 21, 2009
Collective Humanism?
I believe we still are a part of the human sect as such which was shocked to see what happened to a Daniel pearl or that unidentified Indonesian or some soldier whose beheading was pictured. But we still are blind, deaf and indifferent to the sufferings of anonymous people. Again I am no supporter to anyone than just humanism. Revolutions are never humanitarian. And only some of them managed to achieve the ends toward humanism. A revolution is dying. Regrets even if there, doesn’t matter any more. All that matters is this. We could only get to the levels of beggars who show off their travails to get a coin or two. These are far worse than them. As said,”peace is an accident. War is in blood”. It seems like these people never met an accident.
Monday, April 20, 2009
innocuous morality....
Elections are a pander to the weak and the meek who strongly vote. For some it is air time presence in unscrupulous debates in insipid news channels. Elections are real business for politicians. And quite a handful of others who still think individuals are still important in a democracy. The fact is Nehruvian socialism practices has by far left this country to be more socialistic than democratic .That the aam aadmi, reservations kinds still constitute important of the electoral issues highlight this. . And the worst effect of that is having made an autocratic family sit at the country’s’ helm. Economy is just a byproduct of the survival of the politicians. Business powerhouses have learned to work around the politicians. And every time both the clans never fail to ask the responsible Indian upon the faces to fancy them. India shining! Tata’s know to make a 1 lakh car and more than that know how not to allow to make electric cars. Ambani’s know how to create companies, merge them, demerge them, Financial engineer them and every time come out with a stupendous new story about India’s exaltation in the global world. They are doing it , no doubt about that. Everyone had made India proud as it seems. But we know the moral digs they have been through for all these. And there is no one stopping them. Everyone accepts Politicians come to people expecting a scapegoat of them for every five years. But what I generally see these days are different kinds but only that they also come to the common man again expecting a scapegoat of them. These are the campaigners I see day in and day out in cities urging people to exercise their right to vote. One can see them educating them by all means, about the importance of voting etc. The motive of their campaign is “If you don’t vote this country won’t change”. Agreed accepted. Appo ithanai naal vote potavanellam kaena payala? Pulling out any statistic shows that voting turnouts have peaked as far as 80 % and yes of course they have been to very lows too. But in all for a highly geographically, culturally fragmented, factual country like us an average efficiency of 50-60% is a sustainable number. But we need to improve by leaps. That must be done by improving the machineries than harping on the individual every time. And to have survived for 60 years through the ordeals of a shambles left by the British is a daunting task. That for you and me is the real success of our democracy. And that has happened by people voting, voting, and voting. So where was the lax? Obviously we always didn’t vote for the right. So I hate a placard with Voting is your right/Duty. We should hold more placards of Vote for the right and that is your duty. And do we have it in us to say who is right? Placards and debates should try to find that too than excessively stressing on just an issue. We lose comprehensiveness in there. Asking the people to go and vote is just asking them to find the answers out of a MCQ of rowdies, scrupulous idiots. That’s what such campaign will maximum achieve. Instead we should make them ask questions. Also the machineries in India aren’t as effective as such to entirely blame the common man for the failures of elections. I have personal experiences of how ineffective the election commission is. They work more on ad hoc basis than on a permanent basis. And they definitely shoulder the major part of the blame for poor voter turnouts. So I know Voting is my duty and perform it. But I am not able to find the right one to vote. Can we sit over a debate, discuss and find one. So I can perform my duty diligently. The media is a dog.
Sunday, March 29, 2009
என்றும் 16
சினிமா பைத்தியம் எப்போதும் உண்டு. சினிமா எடுக்கும் பைத்தியம். அதற்கான கதையை வழக்கம் போல் ஒரு நள்ளிரவில் யோசித்தது. ஒரு வாழ்க்கை பிரயாணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதை தவிர மற்றதெல்லாம் அக்கணம் யோசித்தது மட்டுமே. யாருக்காவது புரிந்தால் படம் எடுக்க கிளம்பலாம். I wrote something brief in english and encapsuled the scenarios in tamil.
A man in search of his identity
தன்னை தானறிய
தடங்களிடை
தேடுவான்
Quest for identification
வானுயர் வேள்விகள்
வளர்த்தேனும்
வந்த பயனறிய
வேண்டுவான்
Man under constant pressure to prove himself
பிறவிதோறும் பிறர்
போற்றிட வேண்டி
பூண்ட வேடமோ
வாழ்க்கை
இதில் நித்தம்
இவன் தொலைத்தது
இவனையன்றோ
need a break
பாவம் ஏதுமில்லை
பயன் தேவையில்லை
பறக்கவே புறப்படுகிறேன்
composing to have left for good
வெட்டுக்கிளியாகிடினும்
வெட்டவிளிதனில் வரையின்றி
வாழ்ந்திட்டலென்ன
No difference of all purpose and no purpose
உலகாள வாழ்வதும்
உலகு இல் வாழ்வதும்
உபத்திரவமே
understanding purity of purpose
ஒரு பூ
பூத்தாயின்
புவிபெறும் புதுவாசம்
real purpose
திருந்திவிட்டேன்
திரும்பிவிட்டேன்
தந்துவிட்டேன்
realtionship
தொடுவானமாய்
தொல்லை தரும்
தூரத் துயர் நீ
revolt
நிச்சயமாய்
நீ தான்
நான்
reality
நதிநீர்
நாற்றமெடுக்கும்
நகர வில்லை என்றால்
realisation
கானல் நீரதை
கனவென்றாலும்
கண்டறிய காதல் வேண்டும்
ranting
புரியாததெல்லாம்
பிதற்றி புனிதனாயிடின்
பிறந்தோம் எதற்கு?
purpose purity oxymoron
பயனின்றி
பயணித்தேன்
பரவசங்களுடனே
journey
சிறு பயனங்களின்
முற்றங்களில் தொடங்கும்
பிறிதொரு பயணம்
life:war not battle
போராட்டமே வாழ்க்கை
உன்னையறிந்தால்
எதிரி அறிவாய்.
ps:title of post is title of movie
A man in search of his identity
தன்னை தானறிய
தடங்களிடை
தேடுவான்
Quest for identification
வானுயர் வேள்விகள்
வளர்த்தேனும்
வந்த பயனறிய
வேண்டுவான்
Man under constant pressure to prove himself
பிறவிதோறும் பிறர்
போற்றிட வேண்டி
பூண்ட வேடமோ
வாழ்க்கை
இதில் நித்தம்
இவன் தொலைத்தது
இவனையன்றோ
need a break
பாவம் ஏதுமில்லை
பயன் தேவையில்லை
பறக்கவே புறப்படுகிறேன்
composing to have left for good
வெட்டுக்கிளியாகிடினும்
வெட்டவிளிதனில் வரையின்றி
வாழ்ந்திட்டலென்ன
No difference of all purpose and no purpose
உலகாள வாழ்வதும்
உலகு இல் வாழ்வதும்
உபத்திரவமே
understanding purity of purpose
ஒரு பூ
பூத்தாயின்
புவிபெறும் புதுவாசம்
real purpose
திருந்திவிட்டேன்
திரும்பிவிட்டேன்
தந்துவிட்டேன்
realtionship
தொடுவானமாய்
தொல்லை தரும்
தூரத் துயர் நீ
revolt
நிச்சயமாய்
நீ தான்
நான்
reality
நதிநீர்
நாற்றமெடுக்கும்
நகர வில்லை என்றால்
realisation
கானல் நீரதை
கனவென்றாலும்
கண்டறிய காதல் வேண்டும்
ranting
புரியாததெல்லாம்
பிதற்றி புனிதனாயிடின்
பிறந்தோம் எதற்கு?
purpose purity oxymoron
பயனின்றி
பயணித்தேன்
பரவசங்களுடனே
journey
சிறு பயனங்களின்
முற்றங்களில் தொடங்கும்
பிறிதொரு பயணம்
life:war not battle
போராட்டமே வாழ்க்கை
உன்னையறிந்தால்
எதிரி அறிவாய்.
ps:title of post is title of movie
Tuesday, March 24, 2009
Dreary nights...
It's not that i haven't had dreary sleepless nights. But what i had a couple of days back was real dreary. I was in the midst of a very very important decision making. And as given i could not arrive at one. And the burning eyes wouldn't budge to sleep at peace. Meandering mind you see. At that point i took my diary and pen and started scribbling at a frantic pace. This i have done some 6 years back when life was equally horrible and uncertain then. The scribblings went on for a solid 30 minutes. And i finally sleep. The scribblings.
let us make a decision
anywhere close to precision
placate the intuition
plod the information
pan the vision
man the mission
can the decision
arrive by another session.
சோறுக்கும் ஊருக்கும்
வாழ்தல் துயர்
நீரின் நிறம்
காரின் புறம்
கவியின் மனம்
நினைத்து நினைத்து
கனத்து கனத்து
எழுத்து எழுத்து
நாவிற்கினி
நாளையே வேலை
நடுவில் யாசி எழுதுகோலை
கண்ணாடி காட்டும்
தன் நாடி அறியா
உருவம்.
புயலில் சிறகு
அடங்கும் பிறகு
மனமே இலகு
கண்டது கேட்டது
மயிர்
தீர விசாரித்தால்
தீர்ந்திடுமோ உயிர்.
தேடுவது யாதென
தெரிந்திடும் நேரம்
தேடல் பொய்க்கும்
தெரிந்தும் அறிந்தும்
புரிந்தும் வியந்தும்
வீழ்ந்தும் எழுந்தும்
தெளிந்தும் பகிர்ந்தும்
வாழ்க்கை
வண்டின் பசி
பூவில் புசி
எந்தன் பசி
தீராத இந்நடுநிசி
தெளிவென்பது
தெளிவாக செய்யாது
தெரிந்துக் கொள்வது.
அயற்சி வந்த மனதில்
உவர்ச்சி எளிதில்
பெயற்சி கொள்ளும்
சுழற்சி முறையில்.
சிதிலமடைந்து விடுகின்றன
சில நேரங்களில்
சிறிதளவும் இருக்கும் சிந்தனை திறன்.
முரண் என்றறிந்தும்
முட்டிப் பார்ப்பதை
மூடமென்பதா?
முயற்சி என்பதா?
i was least bothered about diction and meaning....it was just a catharsis that night.
and did i arrive at a decision. yes. yeah.
let us make a decision
anywhere close to precision
placate the intuition
plod the information
pan the vision
man the mission
can the decision
arrive by another session.
சோறுக்கும் ஊருக்கும்
வாழ்தல் துயர்
நீரின் நிறம்
காரின் புறம்
கவியின் மனம்
நினைத்து நினைத்து
கனத்து கனத்து
எழுத்து எழுத்து
நாவிற்கினி
நாளையே வேலை
நடுவில் யாசி எழுதுகோலை
கண்ணாடி காட்டும்
தன் நாடி அறியா
உருவம்.
புயலில் சிறகு
அடங்கும் பிறகு
மனமே இலகு
கண்டது கேட்டது
மயிர்
தீர விசாரித்தால்
தீர்ந்திடுமோ உயிர்.
தேடுவது யாதென
தெரிந்திடும் நேரம்
தேடல் பொய்க்கும்
தெரிந்தும் அறிந்தும்
புரிந்தும் வியந்தும்
வீழ்ந்தும் எழுந்தும்
தெளிந்தும் பகிர்ந்தும்
வாழ்க்கை
வண்டின் பசி
பூவில் புசி
எந்தன் பசி
தீராத இந்நடுநிசி
தெளிவென்பது
தெளிவாக செய்யாது
தெரிந்துக் கொள்வது.
அயற்சி வந்த மனதில்
உவர்ச்சி எளிதில்
பெயற்சி கொள்ளும்
சுழற்சி முறையில்.
சிதிலமடைந்து விடுகின்றன
சில நேரங்களில்
சிறிதளவும் இருக்கும் சிந்தனை திறன்.
முரண் என்றறிந்தும்
முட்டிப் பார்ப்பதை
மூடமென்பதா?
முயற்சி என்பதா?
i was least bothered about diction and meaning....it was just a catharsis that night.
and did i arrive at a decision. yes. yeah.
Subscribe to:
Posts (Atom)