Sunday, March 29, 2009

என்றும் 16

சினிமா பைத்தியம் எப்போதும் உண்டு. சினிமா எடுக்கும் பைத்தியம். அதற்கான கதையை வழக்கம் போல் ஒரு நள்ளிரவில் யோசித்தது. ஒரு வாழ்க்கை பிரயாணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதை தவிர மற்றதெல்லாம் அக்கணம் யோசித்தது மட்டுமே. யாருக்காவது புரிந்தால் படம் எடுக்க கிளம்பலாம். I wrote something brief in english and encapsuled the scenarios in tamil.

A man in search of his identity
தன்னை தானறிய
தடங்களிடை
தேடுவான்

Quest for identification
வானுயர் வேள்விகள்
வளர்த்தேனும்
வந்த பயனறிய
வேண்டுவான்

Man under constant pressure to prove himself
பிறவிதோறும் பிறர்
போற்றிட வேண்டி
பூண்ட வேடமோ
வாழ்க்கை


இதில் நித்தம்
இவன் தொலைத்தது
இவனையன்றோ


need a break
பாவம் ஏதுமில்லை
பயன் தேவையில்லை
பறக்கவே புறப்படுகிறேன்


composing to have left for good
வெட்டுக்கிளியாகிடினும்
வெட்டவிளிதனில் வரையின்றி
வாழ்ந்திட்டலென்ன


No difference of all purpose and no purpose
உலகாள வாழ்வதும்
உலகு இல் வாழ்வதும்
உபத்திரவமே


understanding purity of purpose
ஒரு பூ
பூத்தாயின்
புவிபெறும் புதுவாசம்


real purpose
திருந்திவிட்டேன்
திரும்பிவிட்டேன்
தந்துவிட்டேன்


realtionship
தொடுவானமாய்
தொல்லை தரும்
தூரத் துயர் நீ



revolt
நிச்சயமாய்
நீ தான்
நான்


reality
நதிநீர்
நாற்றமெடுக்கும்
நகர வில்லை என்றால்



realisation
கானல் நீரதை
கனவென்றாலும்
கண்டறிய காதல் வேண்டும்


ranting
புரியாததெல்லாம்
பிதற்றி புனிதனாயிடின்
பிறந்தோம் எதற்கு?


purpose purity oxymoron
பயனின்றி
பயணித்தேன்
பரவசங்களுடனே


journey
சிறு பயனங்களின்
முற்றங்களில் தொடங்கும்
பிறிதொரு பயணம்


life:war not battle
போராட்டமே வாழ்க்கை
உன்னையறிந்தால்
எதிரி அறிவாய்.



ps:title of post is title of movie

Tuesday, March 24, 2009

Dreary nights...

It's not that i haven't had dreary sleepless nights. But what i had a couple of days back was real dreary. I was in the midst of a very very important decision making. And as given i could not arrive at one. And the burning eyes wouldn't budge to sleep at peace. Meandering mind you see. At that point i took my diary and pen and started scribbling at a frantic pace. This i have done some 6 years back when life was equally horrible and uncertain then. The scribblings went on for a solid 30 minutes. And i finally sleep. The scribblings.

let us make a decision
anywhere close to precision
placate the intuition
plod the information
pan the vision
man the mission
can the decision
arrive by another session.

சோறுக்கும் ஊருக்கும்
வாழ்தல் துயர்

நீரின் நிறம்
காரின் புறம்
கவியின் மனம்


நினைத்து நினைத்து
கனத்து கனத்து
எழுத்து எழுத்து

நாவிற்கினி
நாளையே வேலை
நடுவில் யாசி எழுதுகோலை

கண்ணாடி காட்டும்
தன் நாடி அறியா
உருவம்.

புயலில் சிறகு
அடங்கும் பிறகு
மனமே இலகு


கண்டது கேட்டது
மயிர்
தீர விசாரித்தால்
தீர்ந்திடுமோ உயிர்.

தேடுவது யாதென
தெரிந்திடும் நேரம்
தேடல் பொய்க்கும்

தெரிந்தும் அறிந்தும்
புரிந்தும் வியந்தும்
வீழ்ந்தும் எழுந்தும்
தெளிந்தும் பகிர்ந்தும்
வாழ்க்கை

வண்டின் பசி
பூவில் புசி
எந்தன் பசி
தீராத இந்நடுநிசி


தெளிவென்பது
தெளிவாக செய்யாது
தெரிந்துக் கொள்வது.

அயற்சி வந்த மனதில்
உவர்ச்சி எளிதில்
பெயற்சி கொள்ளும்
சுழற்சி முறையில்.

சிதிலமடைந்து விடுகின்றன
சில நேரங்களில்
சிறிதளவும் இருக்கும் சிந்தனை திறன்.

முரண் என்றறிந்தும்
முட்டிப் பார்ப்பதை
மூடமென்பதா?
முயற்சி என்பதா?


i was least bothered about diction and meaning....it was just a catharsis that night.

and did i arrive at a decision. yes. yeah.

Sunday, March 22, 2009

Po Po poyikitae iru. Mayirae pochu.

Lalit modi is a big joke. A blatant plagiarist, who shamelessly flaunts himself as the new scion of cricket every time. Also when cricket is more discussed in business channels, it is no more about the sport.Cricket in India is definitely a religion with legends like sachin, kapil dev and a host of others being respected as god. A Lalit modi can't change anything about that.Now finally it's been decided that IPL will be played outside India. Po Po poyikitae iru. Mayirae pochu.

on further news of comparisons of India with Pakistan vis a vis security situations as done by BJP and the other kind of modis are entirely unwarranted. A narendra modi method doesn't work always. And India is not Gujarat everywhere. The best thing for the country is to get every resource concentrated on conducting a free and fair election.

Wednesday, March 18, 2009

Motivation Mannangatti......

Motivation for me is always redundant. parents to pals everyone has tried and failed. It's just that you know a work or you don't. If i know i do it my way. If i don't know i will learn and then do it my way. And i hate schadenfreude disguised and given as motivational peps. No, no one dares to do that too me. Just happened to read this book "Secrets of the Millionaire Mind" (which was yet another self help book that are arrayed in bookshops) as per a good friends' suggestion or even more insistence. The first three lines are for evincing the fact that i read the book more on insistence than suggestion. Bad reason howsoever, but good for reading. Reading is reading. And this book is just a bit more than a rajeshkumar novels' size. A perfect read for a days' travel. The book is nothing but an advertisement printed in book format for a larger program. So i did finish the book for the heck of finishing it. But took just one emphatic thought out of it. It was a kind of though you can't say you had had it sub conscious. That was " Working to win is different from working to not to lose" .Point taken and a worthy on for the time spent on the book.

Tuesday, March 10, 2009

ஞானி...சாநி......

தமிழ்நாட்டில் குடி தண்ணீர் முதல் கலவரங்கள் வரையிலான அனைத்துப் பிரச்சினையும் தீரும் நேரம் அனைவருக்கும் சந்தோசம் தரும் காலம். ஒருவரை தவிர. ஞானி. ஏனென்றால் அப்பொழுது அவருக்கு குறை கூற எதுவும் இராது. என்னுடைய பயம் எல்லாம் அப்படி ஒரு காலம் வரவே போவதில்லை என்பது தான். தமிழோடு சிறு தொடுதளிலேனும் இருக்க வேண்டி அவ்வப்போது படிக்க முனைவது ஆனந்த விகடன் மற்றும் சில தமிழ் பத்திரிகைகளை. ஒரு கட்டத்தில் தவறாது இருந்த பழக்கம் நாளடைவில் நலிந்து போனது உண்மையே. அதற்கு முழு பொருப்புடையன் நானே. உண்மை தமிழை தேடாது குப்பை தொட்டியில் கிளறி கொண்டிருந்தேன். இன்றளவும் முழுமையாக திருந்திவிட வில்லை. அவ்வகையில் ஒரு மாற்றமாய் திகழ்ந்தன சில தமிழ் வலைப்பூக்கள். அதில் ஒன்று இந்த சாநி யினுடையது. கருத்துக்கள் ஒவ்வதிருப்பினும் நான் தேடும் தமிழ் அங்கே இருப்பதன் பொருட்டு அவ்வலைப்பூக்களை தொடர்ந்தேன் . ஞானி யை ஆ.வி யில் தொடர்ந்து வாசித்தது கூட அதனடிப்படையிலே தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களை மிகுந்த கருத்து வேறுப்பாட்டினால் புறக்கணிக்க செய்தேன். ஆனால் அண்மையில் அவர்கள் நான் தீவிரம் காட்ட முயலும் இருவேறு visayangaL பற்றி எழுதியதை படிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் தீவிரமாய் இருப்பின் தேடுதல் நிறைய இருக்க வேண்டியாகிறது. அதனால் எட்டுத்திக்கும் அவைகள் பற்றி எழும் பல்வேறு செய்திகளை படிக்க வேண்டியிருக்கிறது. எனினும் அவற்றையெல்லாமே ஊடகங்களுக்கான எனது ஐயப்பார்வையுடனே எதிர்கொள்வேன்.

அதில் ஒன்று இளையராஜா. சமீபத்தில் வந்த நான் கடவுள், ரஹ்மானுக்கான் ஆஸ்கார் என இருவேறு களங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டவர். இன்னும் சொல்ல போனால் எப்பொழுதுமே அதிகமாய் விவாதிக்கப்படும் விசயங்களில் ஒன்று இளையராஜா. ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்தது ஒரு பரவச நிகழ்வு என்பது எள்ளளவும் ஐயமில்லை. ஒரு இந்தியன் ஆஸ்கார் விருது பெறுவது என்பது ஒரு அமானுஷ்ய செயல் அல்ல என நிரூபித்தார் அவர். இன்னும் சொல்ல போனால் ஆஸ்கர் பற்றிய மாயயை உடைத்தெரிந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இனி நம் கலைஞர்கள் அதை ஒரு தொடுவான இலக்காக கருதி அதை அடைய எத்தனித்து அதிமேதாவி படங்களை எடுக்காமல் நல்ல படங்களை எடுக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த அதிமேதவிகளோ இந்த சூழ்நிலையை இளையராஜா என்ற தனி மனிதன் மீது வன்மம் வீச உபயோகப்படுத்தியுள்ளனர் தங்களின் எழுத்துக்கள் மூலம். சாநி முதலில் அவரது நான் கடவுள் இசையை மட்டுமே விமர்சித்தார். அதை கூட நான் தனி நபர் இகழ்வாகவே கருதுகிறேன். ஒருவர் கலை மீது வைக்கப்படும் கேணத்தனமான கடும் விமர்சனம் அக்கலைஞர் மீதான் வன்மத்தின் மூலமே வரும். அரசியலில் அதை பரவலாக பார்க்கலாம். அங்கே எழும் விமரிசனங்கள் எல்லாமே தனி மனிதன் சார்ந்தவையே. அது போல் சாநி நான் கடவுளின் இசை கரகாட்டக்காரன் தரத்திற்கு இருப்பதாகவும், அதுவே ஒரு உலக தரமான ஒரு படத்தை தரம் தாழ்த்தியுள்ளது என்கிறார். இந்த விமரிசனத்தில் கடும் முரண் ஒன்றுள்ளது. அவர் இப்படத்தின் இயக்குனரை, அவரது கருத்துக்களை சிலாகித்து எழுதியுள்ளார். இசை மட்டும் இவர் எடுத்துக்காட்டும் சில பிற இசை நிகழ்வுகளை போலிருந்திருந்தால் இது ஒரு உலகத்தரமான படமாய் அமைந்திருக்கும் என்று உளறுகிறார். இவர் சிலாகித்த உலகத்தரமான படம் கொடுக்க வல்ல இயக்குனரே இளையராஜா தான் தன் படைப்பை முழுமை அடைய செய்வதாய் கூறி அதில் அதிமித நம்பிக்கையும் உள்ளவர். ஆனால் நம்ம சாநி சொல்வதோ இயக்குனரின் ஆதாரம் அர்த்தமற்றது எனினும் படைப்பு சிறந்தது என்கிறார். மற்றொன்று அவர் குறிப்பிடும் கரகாட்டக்காரன் தரம். அப்படி ஒரு தரமே கிடையாது. தரமானது தரமற்றது என்று இரு பிரிவினை மட்டுமே உளளது. அந்த வகையில் கரகாட்டக்காரன் பட இசை அந்த படத்திற்கு அமைந்த மிகப்பெரிய தரக்கூடுதல் ஆகும் . இங்கே ஒரு துணை விசயம். கரகாட்டக்காரன் இசையை பொறுத்த வரைக்கும் மாங்குயிலே மற்றும் அந்த நகைச்சுவை கோர்ப்பு இசையையும் தாண்டி சிறந்தது அப்படத்தில் வரும் பாட்டாலே புத்தி சொன்னார் என்னும் அருமையான பாடல். இது வரை அதை முழுமையாக அனுபவித்திருக்க மாட்டீர். தயவு கூர்ந்து ஒரு அமைதி சூழலில் அதை கேட்டுப்பாருங்கள். ஆக சாநி வைக்கும் தரம் சார்ந்த வாதமும் குப்பையே. காழ்ப்புணர்வுடையவே. அவர் மேலும் காசி போன்ற ஒரு அசாதரண சூழலுக்கும் அவரால் ரொமான்டிக்காக தான் இசை தர முடிகிறது என்கிறார். நான் எல்லாம் சரியாக இயங்கும் ஒரு வாலிபன். அப்படத்தை பார்க்கும் போது எனக்கு எழுந்து சல்சா ஆட்டமோ, இல்லை கனவுக் காதலியை அங்கே அழைத்து சென்று ஆசை முத்தமிட வேண்டும் என்றோ தோன்றவில்லை. அவ்விசையை தனியாக கேட்கும் பொது கூட அவ்வண்ணம் தோன்றவில்லை.மற்றும் பிச்சை பாத்திரம் பாட்டு அம்பானிகள் அருள் வேண்டி பாடுவது போலுள்ளது என்றும் பிச்சைக்காரர்கள் நிலையினின்று பாடுவது போலில்லை என்கிறார். இங்கே எடுக்கப்படுவது அருட்பிச்சை. இளையராஜா ஒரு நடுநிசியில் தூக்கமற்று எழுந்து இயற்றிய பாடல் என்கிறார் அதனை. அங்கே அக்கணம் அவர் எடுத்தது அருட்பிச்சை. அந்த அருட்பிச்சை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையாய் பெற முயற்சி செய்வதுண்டு. அந்த பிச்சைக்கு இலக்கு ஒரு சிறு பொருளாசை முதற் முக்தி அடைமை வரை பல வகைப்படும். ஆக அங்கே பிச்சைக்கு பாத்திரமேந்தி நிற்பதே உண்மை. பாத்திரத்தின் தரம் பிச்சை இடுபவன் திறம்போருட்டு பகுத்தறிய முடிவது ஆகும். மற்றபடி அம்பானியும் இல்லாதவனும் பிச்சை புகின் ஒரே தரத்தில் தான் செய்ய வேண்டும். அப்படி அமைந்த பாடல் அது. கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் எழுதவில்லை அவர். வன்மம் கண்களை ,காதுகளை மறைக்கின்றன.

ஞானி இளையராஜா விற்கு அடக்கம் பத்தாது என்கிறார். தலைக்கணம் உடையவர் என்கிறார். உதாரணமாக வெட்கமில்லாமல் பாடலாசிரியர்களிடம் வேண்டி தன்னை துதிபாடும் பாடல்களை இயற்றிக்கொண்டார். அவர் எடுத்துக்காட்டுவது அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ராஜா பாட்டு. அவரிடம் இரண்டு கேள்வி. அந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்ததா? அந்த படத்தில் அந்த பாட்டு நிறைவாய் இருந்ததா? இவிரு விசயம் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அது வரை நீங்கள் எழுப்பும் எந்த ஒரு விவரமும் அபத்தமே. இவரது திருவாசக விமரிசனம் தனிக்கதை. அதை மற்றுமொரு களத்தில் விவாதிப்போம்.

இவ்விரு மேதாவிகள் தொட்டேழுதி என்னை சலனமடைய செய்த மற்றொரு விசயம் இலங்கை பிரச்சனை. இவர்கள் இல்லாவிட்டாலும் அது பற்றி எழுத தான் வேண்டும். நான் சில விசயங்களை பற்றி, எழுதுவதால் என்ன ஆகிவிட போகிறது என்று எண்ணி எழுதாமல் விட்டுவிடுவது உண்டு. ஆனால் இந்த ஞானி சாநி போன்றோர் எழுதும் அட்டுழியங்கள் தாங்க முடியாமற் எழுதினேன்.

Saturday, March 7, 2009

அகர முதல ......

அகர முதல என்று எளிதில் ஆரம்பித்து எத்தனையோ விஷயங்கள் பற்றி எழுதிட ஆசை. இங்கு எல்லோரும் எல்லாம் பற்றியும் எழுதுகிறார்கள். ஒருவன் ஒரு விஷயம் பற்றிய உண்மைகளை அறிந்திட பெருந்தடையாக இருப்பது இன்றைய ஊடகங்கள். ஒரு சின்னஞ்சிரியனாய் சரோஜ் நாராயண் சுவாமி வாசித்த செய்திகளில் காட்டிய ஆர்வம் இப்போது கொள்ள முடிவதில்லை. தமிழ் ஊடகங்களில் நடுநிலைமை என்பது அறவே அற்று அராஜகங்களின் ஆணிவேர்கலாய் திகழ்கின்றன. குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள். அவை ஒவ்வொன்றும் சர்வாதிக போக்குடன் செயல்படுகின்றன. ஒரு சிறிய சினிமா வரிசை நிகழ்ச்சியில் கூட அப்பட்டமாய் அநியாய அரசியல் கலக்கும் வல்லமை பெற்றவர்கள் இவர்கள். ஒரு ஒன்றுக்குமே ஆகாத விசயத்தில் கூட அரசியல் புகுத்தும் இவர்கள் சட்டக் கல்லூரி மோதல், வழக்கறிஞர் காவல்துறை கலவரம் போன்ற விவகாரங்களில் அள்ளி தெளிக்கும் அரசியல் அட்சரங்களில் உண்மைகள் வெகுவாக மறைந்துவிடுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதனினும் கொடியவைகள். அவைகள் பிற நாட்டினரின் கைப்பாவைகள் என்று கூட சில நேரங்கில் தோன்றுவதுண்டு. ஒரு உதாரணம். NDTV இல் ஒரு நாள் "ஜனாதிபதி உரை ஆற்றுவார்" என்றொரு செய்தி இடு காண நேர்ந்தது. அன்றைய தினம் குடியரசு தினமும் அல்ல. பொறுத்திருந்து பார்த்தால் பாக்கிஸ்தானின் ஜனாதிபதி அவர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிக்கோண்டிருக்கிறார். என்ன ஒரு தேவுடியாத்தனம். ஊடகங்கள் பணம் போடும் முதலாளிகளின் சர்வாதிகார கூடாரங்கள். இவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிபவரினும் கொடியர்.இன்று வலைப்பதிவர்கள் பலரும் கூட அவ்வண்ணமே. இந்த நாட்டின் இன்றைய மிக முக்கிய பிணிகளில் ஒன்றாய் ஊடகங்கள் இருப்பது தான் உண்மை அவலம்.