Thursday, December 3, 2009

தனி(த்)தல்

உன்னிதழோடு
என்னிதழ்
எண்ணி தழல்.

தனிமை தருணங்களில்
தவித்ததுண்டு காதலுக்காய்
காதல் தருணங்களில்
கருகினேன் தனிமையில்.
பெண் மயில் நீயே காரணம்
பேதை என் வாழ்வின் பூரணம்.


சின்னதாய் சிரிக்கும்
சின்ன பெண்
சிறிதாயினும் சிந்திப்பாளா?
சிரியன் நான் சிதறிபோவேன் .
சிந்தைக்கெட்டாது
சிந்தியது தேனா? பாலா ?

No comments: